Thursday 2 July 2020

ஒட்டகத்தின் முதுகில் கூன் (திமில்) இருப்பது ஏன்?


வறண்ட பாலைவனங்களில் பல நாட்கள் உணவின்றி பயணம் செல்லக் கூடிய திறன் ஒட்டகத்திற்கு இருப்பதால், இதனை பாலைவனக் கப்பல்' என்று வழங்குகிறார் கள் பாலைவனங்களில் அடிக்கடி வீசும் மணற்காற்று ஒட்டகத்தை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. ஒட்டகத்தின் மூக்கு, காது, கண் போன்ற உறுப்புக்கள் மணல் புகாதபடி மிகவும் பாதுகாப்பாக அமைந்துள்ளது.

பொதுவாக ஒட்டகம் ஆறு முதல் பத்து நாட்கள் வரையில் உணவையோ, நீரையோ உட்கொள்ளாமல் உயிர் வாழும் திறன் பெற்றவை

மிருகக்காட்சி சாலைகளில் ஒட்டகத்தைப் பார்க்கும் போது, அதனுடைய முதுகில் கூன் போன்ற அமைப்பு இருப்பதை நாம் பார்த் திருக்கிறோம் இந்தக் கூன் போன்ற அமைப்புக்கு "திமில்' என்று பெயர் ஒற்றைத் திமில் உடைய ஒட்டகம் என்றும் இரட்டைத் திமில் உடைய ஒட்டகம் என்றும் ஒட்டகம் இரண்டு வகைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திமில் 45 கிலோ கொண்டதாக இருக்கும்.

இந்தத் திமிலில் கொழுப்புச் சத்து சேமித்து வைக்கப்பட்டுள்ளது எனவே இதனை

கொழுப்புக் கிடங்கு' என்று கூறுகிறார்கள்.

பாலைவனங்களில் பல நாட்கள் உண வில்லாமல் செல்லும்போது, தனக்குத் தேவை நான் சத்தை முதுகின் மேலுள்ள கூன் போன்ற அமைப்பாக திமிலிலிருந்து எடுத்துக் 6T கொள்கிறது. மேலும் இதனுடைய வயிற்றை னுள்ளே உள்ள ஃபிளாஸ்க் போன்ற இரண்டு பைகளிலிருந்து, இதற்கு வேண்டிய தண்ணீரை பயன்படுத்திக் கொள்கிறோம். முன்னரே கூறியபடி வறண்ட பாலைவனங்களில் பல நாட்கள் தொடர்ந்து பயணம் செய்யும்போது தமிழிலிருந்து கொழுப்புச் சத்தையும் வயிற்றுப் பையிலிருந்து எடுத்துக் கொள்கின்றன தண்ணீரையும்

கூன்

போன்ற அமைப்பு எப்படி உண்டாகிறது என்பதற்கு விஞ்ஞானிகள் விளக்கம் தந்துள்ளார்கள். அதாவது நீண்ட பயணத்தை ஆரம்பிப்பதற்குமுன், ஒட்டகம் தொடர்ந்து உணவை அதிக அளவில் உடல் கொள்கிறது. தேவைக்கு மேல் உள்ள அதிகப் படியான உணவு, கொழுப்பாக மாறி கூன் போன்ற அமைப்பான திமிலில் சேமித்து வைக்கப்படுகிறது. அதே போல அதிகப்படி நான் தண்ணீர் வயிற்றிலுள்ள பைகளில் சேமித்து வைக்கப்படுகிறது. நீண்ட பயணத் தின் போது இவையிரண்டும் உதவி புரிகின்றன.

நீண்ட பயணத்துக்குப் பிறகு, திமிலி லுள்ள கொழுப்புச் சத்து குறைந்தவுடன் திமிலின் அளவு குறைந்து விடுகிறது. இதன் காரணமாக ஒட்டகம் சோர்ந்து படுத்து விடும் சோர்ந்து போன எடுத்துக் ஒட்டகம் நன்றாக ஓய்வு கொண்ட பிறகு மீண்டும் அதனுடைய பழைய நிலைக்கு திரும்பி வரும்

நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு அதாவது உணவையும், நீரையும் அதிக அளவில் திருப்தியுடன் உட்கொண்ட பிறகு ஒட்டகம் மீண்டும் சுறுசுறுப்புடன் எழுந்து பயணத்தைத் தொடர்கிறது.

No comments:

Post a Comment